தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை முதல் தொடங்குகிறது. பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 7.25 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
இதற்காக, 3,300க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க 3,200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வு அறைக்குள் செல்போன் உள்ளிட்டவை எடுத்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது.