கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாள்களை முன்னிட்டு திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
நேற்று ஒருநாளில் மட்டுமே சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்துள்ளதாகவும், 43,199 பேர் முடி காணிக்கை செலுத்தியுள்ளதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரத்துக்கும்
மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.