முருகனின் ஐந்தாம் படை வீடு திருத்தணி. சூரபத்மனை வதம் செய்த பிறகும் கோபம் தணியாத முருகப்பெருமான் திருத்தணிக்கு சென்று தன் கோபத்தைத் தணித்துக் கொண்டதாக ஐதிகம்.
மேலும், இங்குதான் பிள்ளையாரின் உதவியுடன் வேடர் குலத்தில் பிறந்த வள்ளியை முருகன் திருமணம் செய்து கொண்டார்.
திருத்தணி முருகனை வழிபட்டால், தங்கள் மனங்களில் அசுர குணம் தலையெடுக்காது. வாழ்க்கையில் தொல்லைகள் நீங்கி மகிழ்ச்சி பொங்கும்.