ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து ஜம்மு-பூஞ்ச் நெடுஞ்சாலையில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் காயமடைந்த 4 வீரர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வரும் நிலையில், மற்ற மூவரும் நலமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.