ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சிதிலமடைந்த இங்கிலாந்து சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது என்று ஏமன் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
பிப்.18ஆம் தேதி ஏடன் வளைகுடா அருகே செங்கடலில் சென்று கொண்டிருந்த ரூபிமர் கப்பல் மீது ஹவுதிகள் ஏவுகணைகளை வீசி தாக்கினர். அதில் பலத்த சேதம் அடைந்த அந்த கப்பல் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தது.
இந்த நிலையில் அந்த கப்பல் நேற்று நீரில் முழுவதுமாக மூழ்கியது.