டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ், அடுத்த சில போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. அதனால், மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.
காயம் குறித்து ஸ்கேன் செய்ய வேண்டும் என்பதால், அடுத்த ஒரு வாரத்திற்கு போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.