ஜீரணக் கோளாறு, உடல் சூடு, மன அழுத்தம், ஒவ்வாமை போன்ற பல்வேறு காரணங்களால் வாய்ப்புண் வரலாம்.
வாய்ப்புண்ணால் அவதிப்படுவோர் மணத்தக்காளி இலையினை வாயில் போட்டு மென்று சிறிது நேரம் வாயில் வைத்திருந்து விழுங்கலாம்.
பாலில் சிறிது தேன் கலந்து அருந்த, வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாகும். பொதுவாக, துவர்ப்புத்தன்மை கொண்ட வாழைப்பூ வாய்ப்புண்ணுக்கு நல்லது. இதனை வேகவைத்து சூப் செய்து குடிக்கலாம்.