தமிழகத்தில் ஃப்ளூ காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாறுபட்ட சீதோஷண நிலை காரணமாக பலருக்கு காய்ச்சல் கண்டறியப்படுவதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் உடல் சோர்வு, தலைவலி உள்ளிட்ட காரணங்களுக்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை
அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள்கூறுகின்றனர். காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.