விருதுநகர் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அரசு கல்லூரிகள் இன்று திறக்கப்படுகிறது.
இந்த நிலையில் பள்ளிக் கல்லூரி மாணவ மாணவிகள் புதிய பேருந்து அட்டை வழங்கும் வரை அவர்கள் கடந்த ஆண்டு பயன்படுத்திய அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம் என விருதுநகர் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.