சுந்தர்.சி தொடர்ந்து பேய் படம் எடுக்க தனது மகள்கள்தான் காரணம் என அவரது மனைவி குஷ்பு தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான முறையில் எப்படி ரசிகர்களை மகிழ்விப்பது என யோசித்துக் கொண்டே
இருப்பார் என கூறிய அவர், தங்கள் மகள்கள் இருவருக்கும் ஹாரர் படம் என்றால் மிகவும் பிடிக்கும்.
அதனால்தான் அந்த ஜானரிலேயே தொடர்ந்து படம் எடுப்பதாக தெரிவித்தார்.