மக்களவைத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு
ஏற்படுத்தியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திருச்சியில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 5,000 பள்ளி மாணவர்கள் பங்கேற்று, தேர்தலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், மூவர்ண கொடியின் நிறங்களாலான ஹீலியம் பலூன்களை வானத்தில் பறக்கவிட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.