சென்னையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக, வாகன ஓட்டிகள், ‘பங்க்’களில், பல மணி நேரம், ‘கேன்’களு…
வங்கக்கடலில் உருவான தீவிர புயலான மிக்ஜாம், தமிழ்நாட்டை ஒட்டிச் சென்றதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகனமழையை கொட்டித் தீர்த்தது. இதையடுத்து, ஆந்திர மாநிலத்தை நெருங்கியவுடன் நெல்லூர், ஓங்கோல் உள்ளிட்ட இடங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. ஓங்கோல் அருகே பாபட்லா என்ற இடத்தில் மிக்ஜாம் புயல் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர் மழையால் சென்னையே தண்ணீரில் தத்தளித்து வருகிறது. பல பகுதிகளில் வெள்ள நீர் வடிந்தாலும் இன்னும் பல இடங்களில் மழை நீர் துளிகூடா வற்றாத நிலையும் காணப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களை படகு மூலம் மீட்கும் பணி தீவிரமடைந்து வருகிறது. இதனால் தொடர்ந்து இன்று 3வது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இன்னும் மழை பாதிப்புகள் குறையாததால் நாளையும் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.