அரசியல் வருகைக்கு பிறகு முதல்முறையாக நடிகர் விஜய் அண்மையில் தனது தந்தையை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிலையில், இன்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த விஜய்யின் தந்தை ஏஸ்.ஏ.சந்திரசேகரிடம், விஜய் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், மகன் விஜய்க்கு தன்னுடைய வாழ்த்தும், ஆசிர்வாதமும் எப்போதும் உண்டு என்று அவர் கூறினார்.