தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 39 தொகுதிகளுக்கான பார்வையாளர்களை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மொத்தம் 57 ஐஏஎஸ் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை உட்பட 16 தொகுதிகளுக்கு தலா 2 பார்வையாளர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
குமரி தொகுதிக்கு மட்டும் 3 பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.