மக்களவைத் தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஜூன் 4ஆம் தேதி நடக்கிறது.
இந்நிலையில், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் 1,433 ஊழியர்களுக்கு நாளை (மே 29) முதல் கட்ட பயிற்சியும், ஜூன் 3 ஆம் தேதி இரண்டாம் கட்ட பயிற்சியும் அளிக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், சென்னை ஆணையருமான ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.