சமீபகாலமாக திராவிடக் கட்சிகளை சேர்ந்த பலர், பாஜகவை நோக்கி செல்கின்றனர். அந்த வகையில், வைகோவின் மருமகன் கார்த்திகேயன் கோபாலசாமி, மதிமுகவின் முன்னாள் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் புதுக்கோட்டை செல்வம் ஆகியோர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளனர்.
மதிமுகவின் செயல்பாடு குறித்து கடும் அதிருப்தி தெரிவித்து புதுக்கோட்டை செல்வம் சமீபத்தில் கட்சியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.