ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் தொண்டர்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், தொண்டர்களே தங்கள் முதுகெலும்பு என்றும் அவர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார்.
மேலும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவையும் அவர்கள் சித்தாந்தத்தையும் வீழ்த்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.