சென்னை தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அங்கு மோப்ப நாய்கள் உதவியுடன் அதிரடியாக சோதனை நடக்கிறது. அண்மையில் சென்னையில் பள்ளிகளுக்கு இதேபோல் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்தது.
அதில், தற்போது வரை மிரட்டல் விடுத்தவர்களை கண்டறிய முடியவில்லை. அடுத்தடுத்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.