இந்தாண்டு காலநிலை மாற்றத்தால் தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 4,000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கடந்த 3 நாள்களில் மட்டும் 30 பேர் டெங்கு காய்ச்சலால் பாதித்துள்ளனர்.
இதனால், உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.