மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4இல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழகத்தில் அன்றைய தினம் சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களிலும் தலா 1,000 போலீசார் வீதம் 39,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
அத்துடன், கட்சி அலுவலகங்கள், பொது இடங்களில் சுமார் 60,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.