மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஏப்.11 அல்லது 12இல் தமிழகத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்கட்டமாக கோவை, கரூர், நெல்லை, விருதுநகரில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.
இதேபோல், பிரதமர் மோடி தமிழகத்தில் ஏப்.9, 10, 13, 14ஆம் தேதிகளில் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.