சூரியன் குறித்த தரவுகளை ஆதித்யா 1 விண்கலம் இஸ்ரோவுக்கு தொடர்ந்து அனுப்பி வருகிறது.
சூரியனை ஆய்வு செய்வதற்காக கடந்தாண்டு ஆதித்யா 1 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது.
அந்த விண்கலம் விண்வெளியில் இருந்து சூரியன் குறித்த தகவலை அனுப்பி வருவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
சூரிய கிரகணத்துக்கு முன்பும், பின்பும், சூரியகிரகணத்தின்போதும் ஆதித்யா 1 விண்கலம் தரவை சேகரித்தாகவும் அவர்
கூறினார்.