தமிழகத்தில் முதல்முறையாக சூரியசக்தி மூலம் 5,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து எரிசக்தி துறை புதிய சாதனை படைத்துள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மின் தேவையும் அதிகரித்து வருகிறது. நமது மொத்த தேவையில் சூரியசக்தி மின்சாரம் 10% மின்சார தேவையை பூர்த்தி செய்கிறது.
இதையொட்டி, வீடுகளில் சூரியசக்தி தகடுகளை பொருத்த அறிவுறுத்தப்படுகிறது. இதற்கான மானியம் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.