காஞ்சிபுரம், சேலம், சிவகங்கை, பெரம்பலூர், தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் சூறைக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் பல பகுதிகளில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், கோடை வெயிலால் தவித்து வந்த மக்கள், வெப்பம் தணிந்து நிம்மதியடைந்துள்ளனர்.
இதனிடையே, தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.