செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் இன்று அறிவிக்கிறது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கடந்த ஜுன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனு நீதிமன்றங்களில் பலமுறை நிராகரிக்கப்பட்டது. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, அவர் தாக்கல் செய்த இந்த ஜாமின் மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகிறது.