சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருக்கும் EX மினிஸ்டர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.
8 மாதங்களாக சிறையில் இருப்பதாக செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அவரின் வழக்கை தினந்தோறும் விசாரித்து, 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.