2016இல் வெளியான அகிரா (மௌனகுரு படத்தின் இந்தி ரீமேக்) படத்திற்கு பின் பாலிவுட்டில் படம் இயக்குவதற்கான வாய்ப்பே இல்லாதிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.
தற்போது SK23 படத்தை இயக்கிவரும் அவர், அதை முடித்த பிறகு சல்மான் கானை வைத்து இந்திப் படமொன்றை டைரக்ட் செய்ய உள்ளார்.
முருகதாஸ் சொன்ன கதை பிடித்துபோக, தான் அதில் கண்டிப்பாக நடிக்கிறேன் என சல்மான் கான் சம்மதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.