அஜித்குமார் தனது ஆஸ்தான மேனேஜர் சுரேஷ் சந்திரா மீது மனவருத்தத்தில் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அவரது பரிந்துரையை ஏற்றுத்தான் இயக்குநர் மகிழ்திருமேனியின் விடாமுயற்சி படத்தில் நடிக்க அஜித் சம்மதித்தாராம்.
அந்த படம் தொடர்ந்து இழுபறியைச் சந்தித்து வருவதோடு, பட்ஜெட்டையும் மீறி போய்விட்டதாம். அது குறித்து கவலையே இல்லாமல் மகிழ்திருமேனி இருப்பதே மேனேஜர் மீதான அவரது கோபத்திற்கு காரணமாகக் கூறப்படுகிறது.