ராமர் கோயில் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
பாஜக 400 தொகுதிகளில் வெற்றி பெறாவிட்டால், காங்கிரஸ் ‘பாபரின் பெயரால்’ ராமர் கோயிலுக்கு பூட்டு போட்டுவிடும் என மோடி குற்றம்சாட்டியிருந்தார்.
இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா, மோடி மீண்டும் மீண்டும் அப்பட்டமான பொய் பிரசாரம் செய்வதாகத் தெரிவித்தார்