மக்களவைத் தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவடைகிறது. இதுவரை தபால் வாக்கு செலுத்தாத முதியவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இன்று மாலை 5 மணி வரை வாக்குகளை செலுத்தலாம்.
அரசு ஊழியர்கள் சிலருக்கு அவர்களின் தொகுதியில் இருந்து பணியாற்றும் இடங்களுக்கு இதுவரை வாக்குச்சீட்டு வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், பாதிக்கப்பட்ட நபர்கள் எப்படி வாக்களிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.