கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தி, பிரமாண்ட ரோடு ஷோ சென்றார். மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து 2ஆவது முறையாக வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
இதையொட்டி அங்கு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அவர், இன்று வாகனத்தில் பிரமாண்ட ரோடு ஷோ சென்றார்.
அதில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அவரது வாகனத்தைத் தொடர்ந்து சென்றனர்.