தென்மேற்கு பருவமழை சராசரியை விட 6% அதிகம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஜூனில் தொடங்கும் பருவமழையில் நெல்லை, தென்காசி, குமரி, தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்யும்.
அண்மையில் கனமழையால் தென்மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிவிப்பு, அங்கு மீண்டும் கனமழை வாய்ப்பு இருப்பதையே காட்டுகிறது.