அரை லிட்டர் பாலில் ஏலக்காயை போட்டு நன்றாக காய்ச்சி, ஆறவைக்க வேண்டும். பிஸ்தா பருப்பை 2 மணி நேரம் சுத்தமான நீரில் ஊற வைத்து, தோலை நீக்கி அரைக்க வேண்டும்.
ஆறவைத்த பாலுடன் பிஸ்தா, முந்திரி விழுது போட்டு, கலக்கி ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் மிதமான தீயில் கொதிக்க வைத்து கீழே இறக்க வேண்டும்.
தேன், குங்குமப்பூ, சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கி, குளிர வைத்தால் சுவையான பிஸ்தா மில்க் ரெடி.