சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 6 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பிஜப்பூர் மாவட்டம் சிகுர்பாட்டி, புஸ்பகா கிராமங்களுக்கு இடையேயான வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகளுக்கும் அவர்களுக்கும் இடையே சண்டை மூண்டது. இதில் பெண் உள்ளிட்ட 6 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.