தேர்தலில் மோடி 6 ஆண்டுகள் போட்டியிட தடை விதிக்கக்கோரி தொடுக்கப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவதாகவும், தேர்தல் விதிகளை மீறுவதாகவும் குற்றம்சாட்டி பாத்திமா என்பவரால் தொடுக்கப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகும்படி கூறி விசாரிக்க மறுத்தனர்.
இதையடுத்து மனுவை மனுதாரர் திரும்ப பெற்றார்.