தொலைத் தொடர்பு நிறுவனங்கள் செல்ஃபோன் கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டிருப்பதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தேர்தல் முடிந்த பின்பு இந்த நடைமுறை அமலுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.
5ஜி தொழில்நுட்பத்திற்கு மிக அதிகமான முதலீடு தேவைப்படுவதால் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் லாபம் குறைகிறது.
அதனை ஈடு செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.