முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்ற தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது சிறைத் தண்டனை மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டதாக சில தரப்பில் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குற்றவாளி என்ற தீர்ப்பும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்கிறது. இதன் மூலம், காலியானதாக அறிவிக்கப்பட்ட திருக்கோவிலூர் தொகுதி வாபஸ் பெறப்பட்டு பொன்முடி MLAவாக அறிவிக்கப்படுவார்.