அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்த பாமகவும், தேமுதிகவும் தற்போது மவுனம் காத்து வருகின்றன. பாஜகவுடன் கூட்டணியமைக்க பாமக முடிவு செய்திருப்பதாகவும், பாமகவுக்கு 8 முதல் 10 தொகுதிகளை ஒதுக்க பாஜக சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரம்,மாநிலங்களவை சீட் கேட்டு பிடிவாதமாக உள்ள தேமுதிகவின் முடிவுக்கு பாஜக சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில், அதிமுக தனித்துவிடப்படும் எனத் தெரிகிறது.