டெல்லி அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின்
அஷ்வின், சஹால், சந்திப் சர்மா,அவேஷ் கானின் பந்து வீச்சு மிரட்டலாக இருந்தது.
சஹால், அஷ்வின் ஒருபுறம் விக்கெட் எடுக்க, மறுபுறம் சந்திப் சர்மா டெத் பால்களை வீசி ரன்களை கட்டுப்படுத்தினார்.
குறிப்பாக, அவேஷ் கான் கடைசி ஓவரில் டெல்லிக்கு வெற்றிபெற 16 ரன்கள் தேவை என்ற பட்சத்தில், வெறும் 4 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து அசத்தினார்.