மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு, பிரசாரம் உள்ளிட்ட பணிகளில் காங்கிரஸ் கட்சி மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஏப்.6ஆம் தேதி வெளியிடப்படும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
மேலும், ஜெய்ப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, ராகுல் ஆகியோர் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.