கேரளாவில் வீடுகளுக்குள் கடல்நீரில் புகுந்ததில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள கடற்கரையோரம் ஏராளமான மீனவர்களின் வீடுகள் உள்ளன.
கடலில் வீசிய பலத்த காற்றால் அலைகள் பல அடி உயரத்துக்கு சீற்றத்துடன், கடற்கரையோரம் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது.
இதில் அங்கிருந்த ஏராளமான வீடுகள் பலத்த சேதமடைந்தன. வீடுகளை இழந்த பலர், பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர்.