ஜப்பானின் இவாட் மற்றும் அமோரி மாகாணங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 6.1 அளவில் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வடக்கு கடற்கரைப் பகுதிகளில் மட்டும் நள்ளிரவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. சேதங்கள் குறித்த விவரமும் வெளிவரவில்லை.