மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் 100ஆவது நாள் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் அவரது மனைவி பிரேமலதா, மகன் சண்முக பாண்டியன் கண்ணீர் மல்க அழுது, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து, நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்திய பொதுமக்களுக்கு அக்கட்சியின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.