ஜாஃபர் சாதிக் கைதானது தொடர்பாக அமீரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 11 மணிநேரம் விசாரணை நடத்தினர்.
அமீரிடம் விசாரணை நடந்தபோது அவர் தரப்பு வழக்கறிஞர்கள் உட்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே அமீரை தற்போதைக்கு கைது செய்யும் எண்ணம் இல்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
அதே நேரம் அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.