காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அவரது உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு 5 நாள்கள் ஆகியும், தனிப்படை போலீசாரின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.
ஜெயக்குமாரின் மகன்கள் உள்பட பலரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், சிபிசிஐடி அதிகாரி உடன் தனிப்படை போலீசார் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.