ஜப்பானில் ஏவப்பட்ட சிறிது நேரத்தில் ராக்கெட் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘ஸ்பேஸ் ஒன்’ மூலம் இன்று காலை ஏவப்பட்ட இந்த ராக்கெட், விண்ணில் ஏவிய சிறிது நேரத்தில் பெரும் புகை மற்றும் தீப்பிழம்புகளுடன் வெடித்து சிதறியது.
இதில் அரசு உளவு செயற்கைக்கோளான மாக்-அப் இருந்தது. ஏவுதளம் அருகே யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.