இந்தியில் திரைப்படம் இயக்குவதாக பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். தமிழில் மெட்ராஸ், காலா, கபாலி, உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள அவர், பரியேறும் பெருமாள், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.
இந்நிலையில் ரன்வீர் சிங்கை வைத்து இந்தி படம் எடுத்து வருவதாக தகவல் வெளியானது. இதுகுறித்த கேள்விக்கு, “படம் எடுக்கிறேன். கதாநாயகனை இன்னும் முடிவு செய்யவில்லை” என பதிலளித்துள்ளார்.