ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியிருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
அண்மையில் இஸ்ரேல் மீது ஈரான் 300க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், ட்ரோன்களை வீசியது.
இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோல பதிலடி கொடுத்தால் கடுமையான தாக்குதலை நடத்துவோம் என ஈரான் எச்சரித்து வந்தது.
ஆனால் அதையும் மீறி, இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.