பெங்களூருவில் நடைபெற்றுவரும் கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிறப்பாக ஆடிவரும் விராட் கோலி, புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இன்றைய போட்டியில் 3 சிக்ஸர்களை அடித்தபோது அவர், ஒட்டுமொத்தமாக RCB அணிக்காக அதிக சிக்ஸர்கள் (240) அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்.
அவருக்கு அடுத்தபடியாக கெயில் 239, டி வில்லியர்ஸ் 238, மேக்ஸ்வெல் 67, டு பிளெசிஸ் 50 சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.