காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய சரமாரியான ஏவுகணை தாக்குதலில், கடந்த 24 மணி நேரத்தில் 90 பேர் பலியானதாகவும், 177 பேர் படுகாயம் அடைந்ததாகவும் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
5மாதங்களாக நடைபெற்று வரும் போரை நிறுத்துவதற்கு பல நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. எனினும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. இதுவரை 30,410 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 71,000 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.